புதிய சர்வீஸ் சாலையில் பஸ்கள் செல்ல நடவடிக்கை

Update: 2023-08-16 17:39 GMT

நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அனைத்துப் பஸ்களும் வந்து சென்றன. அதன் பிறகு நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இதனால் வெளியூர் செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படுகின்றன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே கிருஷ்ணகிரி-சென்னை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் புதிதாக அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலையில் வெளியூர் பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்