கனரக வாகனங்களால் விபத்து

Update: 2023-07-12 17:44 GMT

நாட்டறம்பள்ளி ஊருக்குள் அரசு பஸ்கள் வருவதில்லை. அனைத்துப் பஸ்களும் பைபாஸ் சாலையிலேயே சென்று விடுகின்றன. நாட்டறம்பள்ளி ஊருக்குள் பஸ்கள் வந்து செல்ல கடந்தசில நாட்களுக்கு முன் போதிய வசதிகளுடன் சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலையில் கனரக வாகனங்களும், இறக்கை ஏற்றி செல்லும் வாகனங்களும் 10 முதல் 15 மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பஸ்கள் நாட்டறம்பள்ளி ஊருக்குள் செல்லாமல் மீண்டும் பைபாஸ் சாலையிலே செல்கின்றன. அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்துப் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம். மனோகரன், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்