பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2022-08-06 16:04 GMT
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி பஸ்நிறுத்தத்தில் பட்டுக்கோட்டை செல்லும் மார்க்கத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தினமும் நூற்றுகணக்கான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் அவதியடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?









மேலும் செய்திகள்