உயரமான வேகத்தடை

Update: 2023-09-06 11:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து காட்டுநாவல் வழியாக கறம்பக்குடி செல்லும் சாலையில் கந்தர்வக்கோட்டையிலிருந்து காட்டுநாவல் வரை உள்ள குறுகலான சாலை அகலப்படுத்தி 2 கிலோமீட்டருக்கு புதிய தார்சாலை போடப்பட்டது. இந்த தார்சாலையில் காட்டுநாவல் ஆதிதிராவிடர் காலனி விளக்கு சாலை அருகேயும், காட்டுநாவல் பஸ் நிழற்குடை உள்ள இடத்திலும் போடப்பட்டுள்ள 2 வேகத்தடைகள் ஒரு அடி உயரத்திற்கு மேல் போடப்பட்டுள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது பின்னால் அமர்ந்து இருப்பவர் தூக்கி வீசப்பட்டு பலர் காயமடைந்து வருகின்றனர். கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களின் சக்கரஅச்சுகள் வேகத்தடையில் உரசி நின்று விடுவதும் பஸ்சில் பயணிப்போர் தூக்கிப்போட்டு இருக்கையில் மோதிக்கொள்வதும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்