பயணிகள் அவதி

Update: 2023-05-21 11:44 GMT

அந்தியூர் அருகே பிரம்மதேசத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தினமும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பள்ளிக்கூட, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் ஏறி சென்று வருகிறார்கள். இவ்வாறு பரபரப்பாக காணப்படும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லை. இதனால் பஸ் ஏற காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையில் கால்கடுக்க நின்று அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே பயணிகள் வசதிக்காக பிரம்மதேசம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்