போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-26 10:42 GMT

 திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் மார்க்கமாக வரும் அரசு பஸ்கள் சுங்கான்கடை பகுதியில் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றன. இதனால் பஸ்சுக்கு பின்னால் வரும் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை வேளைகளில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்