போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

Update: 2022-09-25 15:36 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் நகரில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி