பாலத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது

Update: 2022-09-25 15:35 GMT

கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம், பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த பாலத்தில் வாகனபோக்குவரத்து அதிக அளவில் காணப்படும். தற்போது இரவு நேரங்களில் அந்த பாலத்தில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. எனவே பாலத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி