சேலம் 5 ரோடு சிட்கோ தொழிற்பேட்டையிலுள்ள சாலையை ஆக்கிரமித்து இருபுறத்திலும் வெளிவாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் தொழிற்பேட்டைக்கு வரும் வாகனங்களுக்கும், வேலைக்கு வந்து செல்லும் தொழிலாளர்களுக்கும் குறிப்பாக அரசு கிளை அச்சக பார்வையற்ற பணியாளர்கள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் தொழிற்பேட்டையிலுள்ள குப்பைகளை சாலையோரத்திலேயே கொட்டி எரிப்பதால் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகின்றது. இதுபற்றி பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.