திருச்செந்தூரில் இருந்து உடன்குடிக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த பஸ்கள் அனைத்திலும் இருக்கைகள் கிழிந்து காணப்படுகின்றன. மேலும் இருக்கைகளின் பின்புறத்தில் உள்ள ஸ்குரு மற்றும் ஆணிகள் பயணிகளின் ஆடைகளை பதம் பார்க்கின்றன. மேலும், பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடுவதாலும் பயணிகள் அவதிப்படுகின்றனர். இந்த அவலத்தை போக்க புதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?