சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா அலுவலகம் முன்பு பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இதன்மேல் துணியால் அமைக்கப்பட்டுள்ளதால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வேகமாக காற்று அடித்தால் கூட அந்த நிழற்கூடம் சாய்ந்துவிடும். எனவே பொதுமக்கள் நலன் கருதி கான்கிரீட்டால் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?
-சுந்தர்ராஜ், சங்ககிரி, சேலம்.