மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பஸ் நிலையம் நுழையும் இடத்தில் அதிகம் பேர் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.