கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அதிகம் பேர் பயணம் செய்கிறார்கள். சில டவுன் பஸ்களில் படிக்கட்டுகள், பஸ்சின் மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் பஸ்சின் உள்ளே மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துகளை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த டவுன் பஸ்களை சீரமைக்க வேண்டும்.
-புருஷோத், கிருஷ்ணகிரி.