கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் சேலம் ரோடு, கிளை சிறை ரோடு, சென்னை மற்றும் பெங்களூரு சாலைகள் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக காணப்படுகிறது. இந்த சாலையில் ஆங்காங்கே பஸ், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தி விடுகிறார்கள். இதனால் அங்கு நீண்டநேரமாக வாகனங்கள் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ரமேஷ்குமார், கிருஷ்ணகிரி.