ஊருக்குள் பஸ் வந்து செல்லுமா?

Update: 2022-08-13 12:08 GMT
திசையன்விளையில் இருந்து முடவன்குளம் வழியாக கைலாசபேரிக்கு தடம் எண் 573 அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சை நம்பிதான் இந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்தனர். ஆனால், சமீப காலமாக பஸ் ஊருக்குள் வருவதில்லை. இதனால் மாணவர்கள், வியாபாரிகள் சிரமப்படுகிறார்கள். எனவே, இந்த பஸ்சை முறையாக ஊருக்குள் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்