பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2022-08-12 16:21 GMT

வத்தலக்குண்டுவில் இருந்து சித்தரேவு, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, பெரும்பாறை, தடியன்குடிசை வழியாக தாண்டிக்குடி, பன்றிமலைக்கு தலா ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த 2 பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் வத்தலக்குண்டு, சித்தரேவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தாண்டிக்குடி, பன்றிமலைக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்