மீண்டும் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-08-12 16:01 GMT
வத்தலக்குண்டுவில் இருந்து சித்தரேவு, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, பெரும்பாறை, தடியன்குடிசை வழியாக ஒரு பஸ் தாண்டிக்குடிக்கும், மற்றொரு பஸ் பன்றிமலைக்கும் தினமும் காலையில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த 2 பஸ்களும் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் வத்தலக்குண்டு, சித்தரேவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தாண்டிக்குடி, பன்றிமலைக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி