ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்

Update: 2022-08-12 13:58 GMT

சிதம்பரத்தில் இருந்து ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் சிதம்பரம்-நடராஜபுரம் சாலையில் முத்தையாநகர் பாலம் அருகே ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளது. இதனால் வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி