ஊருக்குள் வராமல் செல்லும் அரசு பஸ்

Update: 2022-08-12 12:01 GMT

திசையன்விளையில் இருந்து விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரம் வழியாக நாகர்கோவில் செல்லும் பஸ் (தடம் எண் 561) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் ஊருக்குள் வருவதில்லை. நாகர்கோவில் பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு அதிகாலையில் வரும் இந்த பஸ் வசதியாக உள்ளது. தற்போது முறையாக வராததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே அந்த பஸ், முறையாக ஊருக்குள் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்