பயனற்ற பயணிகள் நிழற்குடை

Update: 2022-08-11 13:59 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலையில் குப்பையன்பட்டி விளக்கு சாலை அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சாலையானது உயர்த்தப்பட்டதால் இந்த பயணிகள் நிழற்குடை பள்ளத்திற்கு சென்றதால் தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி