திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மணக்குப்பம் கிராம பகுதியில் அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு பஸ் போக்குவரத்து இல்லாததால் திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து மாணவர்கள் படிக்கும் நிலை உள்ளது. எனவே மாணவ -மாணவிகளின் நலன் கருதி உடனடியாக அரசு பஸ் போக்குவரத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்.