அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-06 11:46 GMT

நாமக்கல் பஸ் நிலையத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. ஒவ்வொரு பகுதி செல்லும் பஸ்களும் நின்று செல்ல தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் குறிப்பிட்ட இடங்களில் பஸ்களை நிறுத்தாமல் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் தங்கள் பகுதிக்கு செல்லும் பஸ்சை தேடி கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பஸ்களை குறிப்பிட்ட இடங்களில் நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுகுமார், நாமக்கல்.

மேலும் செய்திகள்