விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்கள் நிறுத்தப்படுவதால் வழக்கமாக வரும் பஸ்கள் அந்த பகுதியை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. எனவே தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் அதன் அருகில் வேறு ஒரு பகுதியில் நிறுத்த போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.