பயணிகள் நிழலகம் பராமரிக்கப்படுமா?

Update: 2022-08-04 15:19 GMT
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளை அடுத்த அணைக்கரை பகுதி தென்கரை மெயின்ரோட்டில் பயணிகள் நிழலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன்காரணமாக மதுப்பிரியர்களின் கூடாரமாக பயணிகள் நிழலகம் மாறிவருகிறது. மேலும், நிழலகத்தின் சுவர்கள் முழுவதும் விளம்பர நோட்டீசுகள் ஒட்டப்பட்டுள்ளன. நிழலகத்தின் உள்பகுதியில் மதுபாட்டில்கள், டம்ளர்கள் குவிந்துகிடக்கின்றன. இதன் காரணமாக பயணிகள் நிழலகத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பயணிகள் நிழலகத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்