வேகத்தடை அமைப்பது அவசியம்

Update: 2022-08-02 13:17 GMT
திண்டிவனம் மேம்பாலத்தில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேலும் வேகமாக வரும் வாகனங்களால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையை கடக்கவே அச்சப்படுகின்றனர். இதனால் பலமுறை வேகத்தடை அல்லது பேரிகார்டு வைக்க, கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்குள் மேம்பாலத்தின் பஸ்கள் ஏறும் பகுதிக்கு முன்பு வேகத்தடை அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்