சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து மாவட்ட தலைநகரான சிவகங்கைக்கு இரவு 9.30 மணிக்கு மேல் பஸ் வசதி கிடையாது. இதனால் மதுரை வந்து அங்கிருந்து மீண்டும் சிவகங்கைக்கு செல்லும் நிலை உள்ளது. அவசரத்திற்காக இரவில் பயணிக்கும் பொதுமக்கள், பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இரவிலும் பஸ் போக்குவரத்து நடைபெற செய்ய வேண்டும்.