போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-30 07:16 GMT

கோணத்தில் இருந்து நாகர்கோவில் வரும் பஸ்கள் செட்டிகுளம் சந்திப்பில் போக்குவரத்து சிக்னலுக்கு அருகே நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு, ஏற்றி செல்கிறார்கள். பின்னால் வரும் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நிற்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சந்திப்பில் இருந்து 100 மீட்டர் தூரத்திலேயே அரசு பஸ்களை நிறுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்.

எம்.சி.முத்துக்குமார், ஆடராவிளை.96009

மேலும் செய்திகள்