ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்

Update: 2022-07-29 06:56 GMT
சின்னசேலம் பஸ் நிலைய வளாகத்தை ஆக்கிரமித்து வியாபாரிகள் சிலர் கடைகளை நடத்தி வருகிறார்கள். மேலும் பஸ் நிலைய வளாகத்தில் பேருந்துகள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருவதால் காலை, மாலை பள்ளி, கல்லூரி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால் விபத்துகளையும், போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்கலாம்.

மேலும் செய்திகள்