போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2022-07-28 13:23 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தையொட்டி நகராட்சி அலுவலகம் உள்ளது. இதே வளாகத்தில் அம்மா உணவகமும் உள்ளது. நகராட்சி அலுவலக சுற்றுச்சுவரையொட்டி இரவு நேர அசைவ உணவுகளை விற்கும் தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இரவு நேரங்களில் அசைவ உணவுகளை விரும்பி வாங்க வருவோர் புதிய பஸ் நிலையம்-நான்குரோடு சந்திப்பு பிரதான சாலையை அடைத்தவாறு தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்