பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-09-10 12:13 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமனஅள்ளி ஊராட்சியில் பழனிகவுண்டன்கொட்டாய், ஜீவாநகர், போயர் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகள் ஊராட்சிக்கு கடைக்கோடி கிராமங்களாக உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு ஏதுவாக காலை நேரங்களில் பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி மாணவர்கள் 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்கிறார்கள். எனவே இந்த கிராமங்கள் வழியாக பஸ் இயக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பிரசாத், நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்