சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு மதிய நேரத்தில் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பயணிகள் பலர் அடுத்த பஸ் வரும் வரை நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே இந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.