விபத்து அபாயம்

Update: 2023-09-06 17:16 GMT

சேலம் குரங்குச்சாவடியில் இருந்து 4 ரோடு வரை வாகனங்கள் சென்று வர பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் வரும் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில்தான் வர வேண்டும். ஆனால் ஒரு சில வாகன ஓட்டிகள் அதிகவேகத்தில் வருகின்றனர். இதன் காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்க வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகதீஷ்வரன், குரங்குச்சாவடி, சேலம்.

மேலும் செய்திகள்