ஊருக்குள் வராத பஸ்சால் பயணிகள் அவதி

Update: 2023-09-06 12:46 GMT

கன்னியாகுமரியில் இருந்து இரவில் திருச்செந்தூர் வழியாக ராமேசுவரம் செல்லும் குளிர்சாதன வசதி கொண்ட பஸ் குலசேகரன்பட்டினம் ஊருக்குள் செல்லாமல் பைபாஸ் சாலையில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தசரா திருவிழாவையொட்டி குலசேகரன்பட்டினத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே குலசேகரன்பட்டினம் ஊருக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்