போக்குவரத்தை நிறுத்தக்கூடாது

Update: 2022-07-25 13:51 GMT
  • whatsapp icon

கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் இருந்து கன்னேரிமுக்கு செல்லும் சாலையோரத்தில் நெடுஞ்சாலை துறையால் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அங்குள்ள பள்ளி, குடியிருப்புகள், மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்கு மாணவர்கள், பொதுமக்கள், நோயாளிகள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே போக்குவரத்தை நிறுத்தாமல் பணிகளை செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்