புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-09-03 11:23 GMT
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து காயாமொழி வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ் (வழித்தட எண்:- 62 பி) பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், பிரேக் பிடிக்கும்போது அதிக சத்தம் எழுவதாகவும் மோகனசுந்தரம் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த பஸ் பழுதுநீக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்