புகார்பெட்டி செய்தி எதிரொலி:-வேகத்தடை அமைக்கப்பட்டது

Update: 2023-09-03 10:52 GMT

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே கிரிரோடு மற்றும் பிரிவு சாலையில் வேகத்தடைகள் இல்லை. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி சிறு விபத்துகள் நடந்து வந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிரி ரோடு மற்றும் பிரிவுசாலைகளில் வேகத்தடைகள் அமைத்தனர். இதனால் பொதுமக்கள்  செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்