போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2023-08-30 11:22 GMT

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை சென்னை, புதுச்சேரி, நாகப்பட்டினம் போன்ற பகுதியில் இருந்து ராமேஸ்வரம், கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை இந்த பகுதியை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வாங்க இந்த மீமிசல் நகருக்கு தான் வர வேண்டும். இதனால் இப்பகுதியில் ஓரளவு கூட்டம் எப்போதுமே இருக்கும். இந்த நிலையில் இங்குள்ள கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து தங்களுடைய கடைப் பொருட்களை சாலையில் வைத்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதினால் பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்