சரிவர இயக்கப்படாத டவுன் பஸ்

Update: 2023-08-20 11:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் 3 அரசு டவுன் பஸ்களும் ஒரு தனியார் பஸ்சும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவ்வழியே செல்லும் அரசு டவுன் பஸ்கள் மதியம் மற்றும் மாலை நேரங்களில் சரிவர இயக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அதில் மாலை 6 மணிக்கு கீரனூரில் இருந்து விராலிமலைக்கு புறப்படும் அரசு டவுன் பஸ் கடந்த சில மாதங்களாக சரிவர இயக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி சென்றுவரும் மாணவர்கள், பல்வேறு வேலை விஷயமாக கீரனூர் புதுக்கோட்டைக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் பொதுமக்கள் மற்றும் மாலை நேரத்தில் விராலிமலைக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கீரனூர்-விராலிமலை சாலையில் தடையின்றி அரசு டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்