போக்குவரத்து நெரிசலால் அவதி

Update: 2023-08-16 16:47 GMT
கோபால்பட்டி பஸ் நிறுத்தம், திண்டுக்கல்-நத்தம் மெயின் சாலையில் உள்ளது. பஸ் நிறுத்தம் அருகில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். விபத்துகளும் நிகழ்கிறது. எனவே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்