ஆக்கிரமிப்புகளால் விபத்து அதிகரிப்பு

Update: 2023-08-13 12:22 GMT
உளுந்தூர்பேட்டையில் உள்ள கடலூர், விருத்தாசலம், திருச்சி, சேலம் சாலையை ஆக்கிரமித்து பலர் கடைகள் கட்டி வைத்துள்ளனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்