கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தர்மபுரி சாலை, திருப்பத்தூர் சாலை, கல்லாவி சாலை, காவேரிப்பட்டணம் சாலை, சந்தூர் சாலை ஆகிய 5 சாலைகளிலும் இருபுறமும் ஏராளமானவர்கள் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் சிப்காட் பகுதிக்கு காலை, மாலை நேரங்களில் வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ், கிருஷ்ணகிரி.