பழுதடைந்த பஸ்

Update: 2023-08-06 16:15 GMT

உடன்குடியில் இருந்து காயாமொழி வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ் (வழித்தட எண்:- 62பி) கடந்த சில நாட்களாக பழுதடைந்த நிலையில் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சில் பிரேக் பிடிக்கும்போது பயங்கர சத்தம் எழுவதால் அச்சத்துடனே பயணிகள் பயணிக்கின்றனர். எனவே டவுன் பஸ்சை பழுது நீக்கி இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்