போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்

Update: 2023-08-06 13:41 GMT

நாகையை அடுத்த கட்டுமாவடி பஞ்சாயத்தில் கோதண்டராஜபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே மின்கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதன்காரணமாக இறந்தவர்களின் உடல்களை மயானத்துக்கு சிரமத்துடன் கொண்டு செல்கின்றனர். மேலும், வாகனங்களில் செல்வர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்றி சாலையோரம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்