அவினாசிக்குள் வராத பஸ்கள்

Update: 2023-08-02 09:54 GMT

அவினாசியில் இருந்து கோவைக்கு மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் செல்கிறார்கள். ஆனால் திருப்பூர் மற்றும் கோவையில் இருந்து வரும் பஸ்கள் அவினாசிக்கு வருவது இல்லை. மேலும் இடைப்பட்ட நிறுத்தங்களில் பஸ் நிற்காது என்று பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விடுகின்றனர். அதேபோல் கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு செல்லும் ஒரு சில பஸ் தவிர தனியார் உள்ளிட்ட மற்ற அனைத்து பஸ்களும் அவினாசிக்குள் வராமல் புறவழிச்சாலையில் சென்று வருகின்றன. எனவே அனைத்து பஸ்களும் அவினாசி வழியாக போய் வர போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகள்