சிவகங்கை மாவட்டம் கல்லாராதினிப்பட்டி, கீழப்பூங்குடி ஆகிய கிராமங்களின் வழியே இயக்கப்படும் பஸ் போதுமானதாக இல்லை. இப்பகுதி மக்கள் நீண்டநேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. குறிப்பிட்ட அளவில் இயக்கப்படும் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அதிக அளவில் அவதிப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்