பயணிகள் நிழலகம் கட்டப்படுமா?

Update: 2023-07-16 10:36 GMT

தஞ்சையை அடுத்த மேல உளூரில் போதுமான பயணிகள் நிழலகம் இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் வெயிலும், மழையிலும் சாலையோரத்தில் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதன்காரணமாக வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலஉளூர் பகுதியில் தேவையான இடங்களில் பயணிகள் நிழலகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்