பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை

Update: 2023-07-12 11:48 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலையில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் பிரிவு சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் பஸ்களில் செல்லும் மக்களின் நலன் கருதி பயணிகள் நிழல் கூடம் கட்டப்பட்டது. இந்த நிழல் கூடம் அருகே எந்த பஸ்களும் நிற்காமல் செல்வதால் ஈரோடு- கரூர் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் பஸ்கள் நின்று செல்வதால் அங்கு பொதுமக்கள் சென்று நின்று பஸ்சில் ஏறி செல்கின்றனர். இதன் காரணமாக மதுபிரியர்கள் இந்த பயணிகள் நிழற்குடைக்குள் அமர்ந்து மதுவை குடித்து விட்டு, பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற் கூடம் அருகே அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி