நடவடிக்கை தேவை

Update: 2022-07-24 07:53 GMT

நடவடிக்கை தேவை

திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அழகியமண்டபம் சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு வந்து பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றனர். ஆனால், இந்த நிழற்குடையின் படிக்கட்டுகள் சேதமடைந்தும், சாலைக்கும் நிழற்குடைக்கும் இடைப்பட்ட பகுதியில் கரடு முரடான பெரிய கற்களும் கிடக்கின்றன. இதனால், பஸ் வந்தவுடன் வேகமாக வரும் பயணிகள் கற்களால் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி கற்களை அகற்றி சேதமடைந்த நிழற்குடையின் படிக்கட்டுகளையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவதாஸ், அழகியமண்டபம்.

மேலும் செய்திகள்