அந்தியூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் உள்ள புதுப்பாளையம் என்ற இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் ஜல்லி கற்களில் சறுக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே வாகன ஓட்டுனர்களின் நலன் கருதி ரோட்டில் கொட்டப்பட்டு கிடக்கும் ஜல்லிகற்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.