செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ரெயில் நிலையத்தில் ஒரு டிக்கெட் கவுண்டர் மட்டும் செயல்பட்டு வருகிறது. பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டியுள்ளது. இதனால், அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. எனவே, ரெயில் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.